கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-6)
[ முதலில் பொறுப்புத் துறப்பு: கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கண்ணதாசன் பாடலாகத் தேடி போட்டாலும் , வாலிப வாலியின் பாட்டு வால் நுழைந்துவிட்டால் , மன்னிக்கவும். பழம் தின்று கொட்டை போட்ட பட்டுக்கோட்டையார் அல்லது மருதகாசி பாடலோ வந்து விட்ட பாவம் போக்க , இந்த (திருவிடை)மருதூர் காரனை காசிக்கு விரட்டாதீர்கள். கவியரசர் பாட்டு எழுதியதை நான் என் கண்ணால் பார்க்கவில்லை. என்னதான் மூன்று தெய்வங்களையும் (கூகுள் ப்ரம்ஹா , யூடுட்யூப் விஷ்ணு , chatGPT சிவா) பூஜித்தாலும் , நடுவே நாரதர் சிண்டு முடிந்துவிட்டால் நான் என்னசெய்வது! சுட்டிக் காட்டுங்கள். சுட்டு விடாதீர்கள். வேண்டுமென்றால் கழுவி கழுவி ஊற்றுங்கள். கழுவிலேற்றிவிடாதீர்கள். அடுத்து , திருமண அழைப்பிதழ்களில் , இறுதியில் , “vaasaka dosha kshnakarthavya” ( वासकदोषा क्ष्नकर्थव्य ” २ .) என்ற ஒரு சமஸ்கிருத சொற்றொடரைக் காண்கிறேன் ; இதன் எளிய பொருள் “பிழைகள் மற்றும் விடுபடல்களுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்!” (E&OE - Errors and Omissions may please be Excused) என்பதாகும். நான் ஆங்கிலப் பதிப்பில் எழுத்துப்பிழை சரிபார்ப்பு செய்தாலும...