கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-4)
கண்ணதாசனின் ' நான் யார் ?' என்ற பாடலுக்கு மீண்டும் வருவோமேயானால்— " இப்பூவுலகில் ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் தோன்றி மறைந்துவிட்ட நிலையில்— ' நாம் ' மட்டுமே தனித்துவமானவர்கள் என்றும் , நாம் கற்பனை செய்துகொண்ட கதைகள் (personal stories) மட்டுமே ' சிறப்பானவை ' (special) என்றும் நாம் நம்பவேண்டிய அவசியமில்லை ”, என்கிறார் Eckhart Tolle, அவரின் புத்தகங்களிலும் YouTube சொற்பொழிவுகளிலும். ஊர்வன , இருவாழ்விகள் , பறவைகள் மற்றும் பாலூட்டிகள் போன்ற நமது மற்ற மூத்த சகோதர சகோதரிகளைப் போலவே நாமும் வெறும் உயிரினங்கள்தான். இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறதா ? ' நமது உள் உலகம் ' ( கனவுத் தொழிற்சாலை ) எவ்வாறு படைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள மறுபடி நம் ' உள்ளிருந்து ' தொடங்குவோம் . இந்திரனில் சக்ரவர்த்தி தனது "ஸ்டோரீஸ் அட் வொர்க்" (Book: “Stories at Work” by Indranil Chakraborty) என்ற புத்தகத்தில் உறுதிப்படுத்துகிறார்... "மூளையானது , உள்ளீடாகப் பெறப்பட்ட அனுபவத்தை ஒரு கதையாக (story) மாற்றி , பின்னர் அந்தத் தான...