கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-20)
என்ன சார் , போன எபிசோடில் ரெண்டு பேரும் சமாதானமாய் போயிட்டாங்க , யாரு கடைசீயில ஜெயிச்சாங்க ? ' ஆணா -பெண்ணா ' ன்னு சொல்லாம நீங்க எஸ்கேப்பு ஆயிட்டீங்களே என்று கேட்பவர்களுக்கு , கவியரசர் கண்ணதாசனே பட்டிமன்ற தீர்ப்பு எழுதி இருக்கிறார் , இந்தப் பாடலில் (படம்: திருவருட் செல்வர்): “ ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா வேட்டி சேலை போட்டி போட்டு ஆத்துக்குக்குளே அலசும் போது வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா - ஆனா வீட்டுக்குள்ளே சேலை தானே வெல்லுதப்பா வெள்ளையப்பா ” வீட்டுக்கு வெளியே ஆண் அரசாங்கம் நடந்தாலும் , நாலு சுவர்களுக்குள்ளே ‘ நாரி சக்தி ’ (பெண்கள் ராஜ்ஜியம்) கோலோச்சுகிறது என்கிறார் கவிஞர். அந்த நாலு சுவர் நாடகத்தை அன்பான கதையாக எப்படி மாற்றுவது என்று பார்ப்போம். திருமண வாழ்க்கையில் உள்ள ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்கள் அடிப்படை இயல்புகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு மதிக்காதபோது , அவற்றைச் சுய விருப்பத்துடன் பூர்த்தி செய்துகொள்ள...