கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-21)
இப்போதெல்லாம் ஜோடிகள் சாமர்த்தியம் என்று எண்ணிக்கொண்டு ' தனி ' க் குடித்தனம் போய்விடுகின்றனர். பலர் கல்யாணத்துக்கு முன்பே ' பழைய லக்கேஜ் ' (parents are old furniture!) எதுவும் கூடாது என்று கண்டிஷன் போட்டுத் தான் தாலியே கட்டப்படுகிறது. ஆனால் , தனி ஆவர்த்தனம் செய்யும் போதும் ஜோடிகளுக்குள் சண்டை வருகிறது , முக்கிய காரணம்: ஒருவர் சம்பாதிக்க கஷ்டப்பட இன்னொருத்தர் அதை செலவழிப்பதில் பிசியாக இருப்பார். இல்லை இருவருமே பணத்தை தண்ணி போல ஓட விடுவார்கள் அல்லது இருவருமே பிடித்து வைத்துக் கொள்ளுவார்கள். இருவருமே சம்பாதித்தால் , "My money is my money; your money is your money" என்று அக்ரிமெண்ட் வேறு. இருந்தும் பல குடும்ப சண்டைகளுக்கு காரணம் , காசுதான். "The Millionaire Next Door: The Surprising Secrets of America's Wealthy" என்ற தங்கள் புத்தகத்தில் , தாமஸ் ஜே. ஸ்டான்லி மற்றும் வில்லியம் டி. டாங்கோ ஆகிய ஆசிரியர்கள் ஒரு முக்கிய உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்: "பணத்தை வீணடிக்கும் குணம் கொண்டவர்களைத் திருமணம் செய்துகொள்பவர்கள் , ஒரு தலைமுறையிலேயே பெ...