கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-12)
ஆதாம் ஏவாள் காலத்து காதலுக்கு பின் மனிதனை சிந்திக்க வைத்து தெளிய வைக்க எல்லா ஞானிகளும் கேள்விகளாக கேட்பார்கள். கவி ஞானி கண்ணதாசனோ கேள்வி தொடரால் துளைப்பார் பல பாடல்களில். இன்னும் சில பாட்டில் பதிலும் சொல்லுவார். சிலர் பாடல்களில் கேள்வியிலேயே பதிலும் வைத்து காட்டுவார். உதாரணமாக இப்பாடலில் ' காதல் இல்லாத வாலிபமா ?' என்று கேட்கிறார் (படம்: ஆனந்த ஜோதி): “ பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா ” வார்த்தை வித்தககர் பதிலே கேள்வியாகப் பாடியிருக்கிறார். ஆனால் ஒரு வரியில் வரப்போகும் குடும்ப வாழ்க்கையில் நடக்கப் போவதை கூடலுக்குப்பின் ஊடல் போல பொடி வைத்து சொல்லியிருக்கிறார்: “ நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும் பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கதையல்லவா ” தனது “பெண் மூளை” ( The Female Brain) என்ற புத்தகத்தில் , லூஆன் பிரிசென்டைன் (Louann Brizindine) கூறுகிறார் , “ இருவருக்கு இடையேயான குறுகிய மற்றும் நீண்ட கால ‘ஈர்ப்பு’ தற்செயலானது போல் தோன்றலாம் , ஆனால் உண்மை என்னவென்றால் , நம் மூளைகள் நன்கு அறிந்திருக்க முன்க...