Posts

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-17)

  காதலின்போது ஊடல் , கல்யாணத்துக்குப்பின் மோதல் என்பது சிவா-பார்வதி காலம் தொடங்கி சிவாஜி-பத்மினி காலத்தில் தொடர்ந்து சிம்பு-சிம்ரன் வரை நடக்கும் ஆண்-பெண்   உறவின் எதார்த்தம் . ஏதோ ஒரு ரைமிங் ஆக இருக்கட்டுமே என்று அடிச்சு விட்டேன். அதனால இந்த ஜோடிகளுக்குள் தகராறு என்று சிண்டு-கிண்டு   முடிந்து விடாதீர்கள். படத்தில் பாட்டு வர்ற ‘ டைமிங் ’ சரியில்லை என்றால் கூட ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ‘ ரைமிங் ’   சரியாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத (எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்) இலக்கணம் ஒன்று சினிமா துறையில் உள்ளது. உதாரணத்துக்கு , முதல் வரி ' ஆவணி ' யில் முடிந்தால் , அடுத்து வருவது ' தாவணி '- யாகத்தான்   இருக்க வேண்டும் என்பது யாரும் மீரக்கூடாத தமிழ் சினிமா விதி (நம் தலைவிதி ! ). ஆனால். கண்ணதாசன் மாறாக   ' மாங்கனி ' என்று எழுதினார். மச்சான் ' மீசை ' என்றால் , அப்புறம் மச்சினி ' ஆசை ' யைப் போட்டுக்கலாம். இப்போ ' தோசை ' என்று சொல்லிக்கூட சமாளித்து விடுவார்கள். முதல் வரியில் ' மங்கை ' என்றால் அடுத்த வரியில் கட்டாயம் ' கங்கை ...

Kannadasan – A Realized Master (Part 17)

Playful lovers' tiffs before marriage and clashes after marriage—this is the dynamic between men and women that has persisted from the era of Shiva and Parvati, through the days of Sivaji and Padmini, right up to Simbu and Simran. I just threw that line in for the sake of a rhyme. So, please don't go stirring up trouble or imagining a rift between these pairs because of it. Audiences might overlook poor timing regarding when a song appears in a movie, but there is an unwritten rule—one that even the illiterate seem to know—that the rhyming must be perfect in the film industry. For instance, if the first line ends with *Aavani*, the next simply has to end with *Thaavani*; it is a cinematic commandment (or perhaps our collective fate) that no one dares to break. Yet, Kannadasan defied this by using *Maangani* instead. If the boy’s line mentions *Meesai* (moustache), the girl’s line might follow with *Aasai* (desire)—these days they might just get away with *Dosai* (dosa). In th...