கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-10)
( பொறுப்புத் துறப்பு: திரையில் பல்வேறு பாடல்களைப் பார்த்த பல வாசகர்கள் , அவை இந்தத் தொடரில் சொல்லும் கதைக்கு சிலசமயம் பொருத்தமற்றதாகத் தோன்றுவதாகக் கருதுவார்கள். நான் ' கதை விடுவதாகக் ' கூட நினைக்கலாம். படம் பார்த்தவர்களுக்கு கதையும் , திரையின் நடிகர்கள் தாக்கமும் பாடல்களின் இனிய சூழலும் நிறைய நினைவில் இருக்கும். நான் ' படம் பார்த்து கதை ' சொல்லவில்லை. எனவே அவற்றின் கதைக்களமும் திரைக்கதைப் பின்னணியும் எனக்குத் தெரியாது. கண்ணதாசனின் ஞான வரிகள் , இந்திய ஆன்மீகம் , பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் மேற்கத்திய தத்துவஞானிகள் , சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணங்களுடன் அற்புதமாக ஒத்திருப்பத்தைக் கண்டு அனுபவித்துப் பகிர்வதே இந்த எனது எளிய முயற்சியாகும்) . கண்ணதாசன் காதல் பாடல்களிலும் உயர்ந்த தத்துவங்களை பேசுவதில் வல்லவர். ( படம்: கை கொடுத்த தெய்வம் ): “ ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே குழந்தையம்மா ” ஒரு அப்பாவிப் பெண்ணை வர்ணிக்கும்போது , ‘ சொல் என்பது அந்தப் பொருள் அல்ல!’ (W...