கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-15)
பள்ளி நாட்களில் சயன்ஸில் ' அயல் மகரந்த சேர்க்கை ' என்று சொல்லிக் கொடுத்தது புரியவில்லை. பிடிக்கவும் இல்லை. ஆனால் கண்ணதாசன் மலர்-வண்டு என்று பாடிய போது அந்த சிறுவயதில் கொஞ்சம் அரசல் புரசலாக புரிந்த மாதிரி இருந்தது , ஆனால் ரொம்பவும் பிடித்திருந்தது. கண்ணன் , ராதை , மீரா , வீணை , ராமன் , சீதை , கங்கை , யமுனை , நதி , ஓடம் , அலை , பிருந்தாவனம் , நிலவு என்று கவிஞர் ஆயிரக் கணக்கில் பாட்டு எழுதியிருந்தாலும் , மலரைத் தேடும் வண்டுக்கும் பஞ்சம் வைக்கவில்லை. மூத்தவர் மருதகாசியின் ' முல்லை மலர் மேலே , மொய்க்கும் வண்டு போலே ' யை (படம்: உத்தம புத்திரன்) முன்பே பார்த்தோம். அவர் மேலும் ' வெள்ளி அலை மேலே துள்ளும் கயல் போலே , அல்லி விழி தாவ கண்டேன் என் மேலே ' என்றும் தொடர்ந்தார். கவியரசர் அதே பாதையில் வித்தியாசமாக இப்படி சொல்கிறார் (படம்: இரு வல்லவர்கள்): " நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்" காதலன் தன் காதலிக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதை நாம ஊர் கவிஞர் ஜெயலன் ' கன்னிக்கு கண்ணி வைத்த வேடன் ' என...