கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-17)
காதலின்போது ஊடல் , கல்யாணத்துக்குப்பின் மோதல் என்பது சிவா-பார்வதி காலம் தொடங்கி சிவாஜி-பத்மினி காலத்தில் தொடர்ந்து சிம்பு-சிம்ரன் வரை நடக்கும் ஆண்-பெண் உறவின் எதார்த்தம் . ஏதோ ஒரு ரைமிங் ஆக இருக்கட்டுமே என்று அடிச்சு விட்டேன். அதனால இந்த ஜோடிகளுக்குள் தகராறு என்று சிண்டு-கிண்டு முடிந்து விடாதீர்கள். படத்தில் பாட்டு வர்ற ‘ டைமிங் ’ சரியில்லை என்றால் கூட ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ‘ ரைமிங் ’ சரியாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத (எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்) இலக்கணம் ஒன்று சினிமா துறையில் உள்ளது. உதாரணத்துக்கு , முதல் வரி ' ஆவணி ' யில் முடிந்தால் , அடுத்து வருவது ' தாவணி '- யாகத்தான் இருக்க வேண்டும் என்பது யாரும் மீரக்கூடாத தமிழ் சினிமா விதி (நம் தலைவிதி ! ). ஆனால். கண்ணதாசன் மாறாக ' மாங்கனி ' என்று எழுதினார். மச்சான் ' மீசை ' என்றால் , அப்புறம் மச்சினி ' ஆசை ' யைப் போட்டுக்கலாம். இப்போ ' தோசை ' என்று சொல்லிக்கூட சமாளித்து விடுவார்கள். முதல் வரியில் ' மங்கை ' என்றால் அடுத்த வரியில் கட்டாயம் ' கங்கை ...