கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-8)
போன எபிசோடை மனம் ' நம்மை ஆட்டுவிப்பது ஏன் ?' என்ற கேள்வியுடன் முடித்திருந்தோம். கவிஞானியின் பாடல் வரிகளிலேயே சொன்னால்... ( படம்: பச்சை விளக்கு ). “ கேள்வி பிறந்தது அன்று ; நல்ல பதில் கிடைத்தது இன்று ! நமது மனதில் உள்ள கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணதாசனின் வாயிலாகவே விரைவில் நிச்சயம் பெறுவோம். இப்போது பின்வரும் இரண்டாவது வரியைப் பார்ப்போம்: “ ஆசை பிறந்தது அன்று ; யாவும் நடந்தது இன்று ” ' நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ' என்ற கவிஞர் இந்தப் பாடலில் , “ நாம் எதை விரும்புகிறோமோ அது நிறைவேறும்” என்கிறார். எழுத்தாளர் சுசான் ஈடர் (Suzanne Eder) தனது “நீங்கள் விரும்புவது உங்களை விரும்புகிறது” (Book: “What You Want Wants You”) என்ற புத்தகத்தில் , “ ஒரு அதிர்வு பிரபஞ்சத்தில் , உங்கள் எண்ணங்களின் தரம் , நீங்கள் வாழும் அனுபவத்தின் தரத்தை நிர்ணயிக்கிறது” என்று அறிவிக்கிறார். நமது ஆழ்ந்த , மிகவும் உண்மையான ஆசைகள் தவறுகளோ அல்லது கவனச்சிதறல்களோ அல்ல என்பது அவரது உறுதியான நம்பிக்கை. அவை ஒரு ஆழ்ந்த அறிவாற்றலிலிருந்து வரும் சமிக்ஞைகள் (signals), அவை நம்மை நமது மி...