Posts

Showing posts from April, 2012

பொங்கும் பொங்கல் நினைவுகள்

கிராமத்திலேயே பிறந்து இருபது வருடங்களுக்குப் பின் மும்பை நரகத்தில் மூச்சைத் தொலைத்து , திரும்பவும் மண்வாசனையால் பொங்கி வரும் பொங்கல் நினைவுகளை எழுதுகிறேன். தமிழிலேயே யோசித்து , தமிழில் பேசி , தமிழ் எழுதியவனுக்கு , முப்பது வருடங்களின் இந்தி ஆங்கில தாக்கத்தால் , தமிழ் தடுமாறுகிறது. பொங்கல் என்றாலே முதல் நினைவு தம்பி மூன்றாவது படித்தபோது எழுதிய கட்டுரையில் ‘ காலி ’ ல்லாத கடைசீ சிரிப்பு வரி: “எல்லோரும் பெ ங்கலோ பெ ங்கலென்று பெ ங்கினார்கள்”. இதைச் சொல்லியே தங்கை இத்தனை வருடங்களும் தம்பியின் ‘ காலை ’ வாரிக் கொண்டிருக்கிறாள். அப்பா ரெயில்வே அதிகாரி. அந்தக் காலத்தில் அந்த வேலைக்கு கிராமங்களில் மரியா ’ தை ’. அதனால் , ‘ தை ’ வந்தால் ஊர் விவசாயிகள் பொங்கலுக்கு புது அரிசி தருவார்கள். அம்மா பானைக்கு இஞ்சி மஞ்சள் மாலையிட்டு சர்க்கரைப் பொங்கல் வடிப்பாள். என் குறியெல்லாம் பானையின் அடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் வெல்லத்திலேயே இருக்கும். செங்கரும்பைக் கடித்து பல் உடைந்த நினைவும் வருகிறது. ‘ கட்டை ’ ப் பையனாக இருந்த எனக்கு உயிரோட்டமும் , உணர